தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 23) உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா, கடந்த 12ஆம் தேதி முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் உச்சபட்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் விழா, நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எக்கச்சக்கமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு நாளை (ஏப்ரல் 23) மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய மே 11ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும். அதேபோல் 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை நடைபெற வேண்டிய சமூக அறிவியல் தேர்வு, நாளை மறுநாள் (ஏப்ரல் 24) நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 4 முக்கிய வினா.., இன்று திங்கள் கிழமை, 61 நாள் கழித்து என்ன கிழமை வரும்?? விடை உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here