தமிழகத்தில் ரயில் சேவைகள் தொடங்கப்படுமா..? அதிகாரிகள் விளக்கம்..!

0

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது  வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அனால் பிரதமர் மோடி ஏப்ரல் 30 வரை நீடித்துள்ளார் ,ரயில் சேவை தொடங்கப்படுமா என்று சிலர் கேட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸைத் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழுவதும் ஊரடங்கு உத்தரவு  திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மார்ச் 25-ம் தேதி அறிவித்தார். இதனால் அனைத்து கல்வித்துறையும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலை இல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர் நாட்டு மக்கள்.

ரயில்கள் இயக்கப்படுமா ?

கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன. வரும் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு  முடிவதால், அதன்பின் எவ்வாறு ரயில்கள் இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்தன.

ஆனால் இப்பொழுது ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது  மக்கள் சிலர் ரயில்கள் இயக்கப்படுமா என கேள்விக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.ஊரடங்கு உத்தரவு நீடித்துள்ளதால் ரயில் சேவை இயக்கபடாது என தெரிவித்துள்ளது.பயணிகள் முன்பதிவு செய்த பணத்தை திருப்பி செலுத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here