தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை..!

0
Raining
Raining

தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக சில பகுதிகளில் மழை பொலிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எப்போது தொடங்கும்..? செயலாளர் நந்தகுமார் விளக்கம்..!

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 37 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்ஸியஸ் ஆக வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்திய கிழகப்பு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here