சென்னையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மது அருந்தலாமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி முதல் கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக செலுத்தப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களுக்கு மீண்டுமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அஷ்வினுக்கு நடராஜன் வைத்த பெயர் – ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!!
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். தொடர்ந்து சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் மது அருந்தக் கூடாது என சமூகவலைதளங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாம் கட்டமாக தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக காலதாமதம் ஆகும்’ என கூறியுள்ளார்.