தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 3550
  • இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 31
  • இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 1,62,970
  • இன்று (மே 4) சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 12,863

தமிழகத்தில் இன்று 30 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1409 (39.7%) ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 2,107 பேர் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 3550 பேரில் 2,392 பேர் ஆண்கள், 1,157 பேர் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் சென்னை கோயம்பேடு சந்தை பகுதியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here