கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஜெர்சியுடன் விடைபெற வேண்டும் – ஆண்ட்ரே ரசல் விருப்பம்..!

0

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் இந்த முறை கொரோனவால் தடைபட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கடைசி வரை கொல்கத்தா அணிக்காக தான் விளையாட வேண்டும் என ஆண்ட்ரே ரஸ்ல் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஆல் ரவுண்டர் ரஸல்:

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன ஆண்ட்ரே ரஸ்ல் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். 32 வயதான இவர் பல இக்கட்டான சூழல்களில் அணியை தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இவர் ஆன்லைன் உரையாடலின் பொழுது ஐபிஎல் மற்றும் கரீபியன் லீக் போட்டிகளில் விளையாடும் பொழுது தான் மெய்சிலிர்த்து போவதாக கூறியுள்ளார்.

அதிலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு இணையே இல்லை என்கிறார். 6 சீசன்களாக கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நான் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து விளையாடுகிறேன் என்கிறார். தனது கடைசி ஐபிஎல் போட்டி வரை கொல்கத்தா அணிக்காக தான் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் 2 ஆட்டங்களில் சோபிக்காமல், அடுத்து 3-வது ஆட்டத்தில் இறங்கும் போதும் கூட ரசிகர்களின் ஆரவாரமும், வரவேற்பும் ஒரே மாதிரி இருப்பது தன்னை கவர்ந்ததாக தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here