தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1700ஐ தாண்டி உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் இருவர் கொரோனவால் உயிர் இழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை – 1755 பேர்
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 22 பேர்
இன்று மட்டும்114 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் 23,503 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு:
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 7 பேர், மதுரையில் 4 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது.
- சென்னை – 452 பேர்
- கோவை – 141 பேர்
- திருப்பூர் – 110 பேர்
- திண்டுக்கல் – 80 பேர்
- ஈரோடு – 70 பேர்
- நெல்லை – 63 பேர்
- செங்கல்பட்டு – 57 பேர்
- மதுரை – 56 பேர்
- தஞ்சை – 55 பேர்
- நாமக்கல் – 55 பேர்
- திருச்சி – 51 பேர்
- நாகை – 44 பேர்
- தேனி – 43 பேர்
- கரூர் – 42 பேர்
- விழுப்புரம் – 42 பேர்
- திருவள்ளுர் – 52 பேர்
- ராணிப்பேட்டை – 39 பேர்
- தென்காசி – 32 பேர்
- திருவாரூர் – 29 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |