இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் சமூக பரவலாக மாறி விட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் கடந்த 28 நாட்களில், 15 மாவட்டங்களில் புதிய பாதிப்பு எதுவும் இல்லை. இன்று வரை நாட்டில் 80 மாவட்டங்கள் கடந்த 14 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |