தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி..!

0
corona report
corona report

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்கள் செல்ல செல்ல புது உச்சத்திற்கு சென்று வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா ரிப்போர்ட் :

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்து கொண்டே செல்கிறது. ஆறுதல் அளிக்கும் தகவலாக குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரிக்கத் தொடங்கிய உள்ளது. தமிழகத்தில் இதுவரை 40,698 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,479 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 92 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 26 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 25,167 பேர் ஆண்கள், 15,514 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:

  • சென்னை – 28,924 பேர்
  • செங்கல்பட்டு – 2,569 பேர்
  • திருவள்ளூர் – 1,752 பேர்
  • காஞ்சிபுரம் – 650 பேர்
  • திருவண்ணாமலை – 586 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here