இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
வரவிருக்கும் அவரது பிறந்தநாள்:
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரும் முன்னணி இயக்குனர் சந்திரசேகர் மகனும் ஆன நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டும் இன்றி பின்னணி பாடகரும் ஆவர். தனக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ள இவர் 50 க்கு மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அவரது பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எப்போதும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம்.
நேபாள போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இந்தியர் பலி, இருவர் படுகாயம் – எல்லையில் பதற்றம்..!
விஜய் உருவப்பட பேனர்கள் வைத்தல், கொடி தோரணங்கள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவர். ஏழைகளுக்கு பல உதவிகளும் செய்வர்.
நடிகர் விஜயின் வேண்டுகோள்:
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் அதிகரித்து உள்ள நிலையில் இது போற்ற பணிகளில் ஈடுபட்டால் அந்த தொற்று மேலும் பரவ வாய்ப்பு உள்ளதாக அனாய்வரும் பயந்தனர். இந்த செய்தி அறிந்த நடிகர் விஜய் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்திடம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தினார். மேலும் தனது ரசிகர்களை இந்த வருடம் கொண்டாட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதனையடுத்து அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கும் தொலைபேசி மூலம் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரசிகர்களின் வங்கி கணக்கில் நடிகர் விஜய் பணம் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.