இந்தியா மற்றும் நேபாள நாட்டின் எல்லையில் உள்ள சிதமர்கி என்கிற இடத்தில் நேபாளத்தைச் சேர்ந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பீஹாரைச் சேர்ந்த ஒருவர் பலியானார் மேலும் இருவர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
எல்லைப் பிரச்சனை:
இந்தியா – சீனா இடையிலான லடாக் எல்லைப்பிரச்சனை பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமூகமாக முடிந்து உள்ளது. இந்நிலையில் தற்போது நேபாளம் – இந்தியா இடையே எல்லைப்பிரச்சனை தொடங்கி உள்ளது. ஏற்கனவே இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தன் நாட்டுடன் இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று பீஹார் மாநிலம் லால்பாண்டி – ஜான்கி நகர் எல்லைப்பகுதியில் சோனேபர்ஸா என்கிற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இதில் எல்லைதாண்டி வந்து நேபாள நாட்டு போலீசார் இந்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. உள்ளூர்வாசிகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், இருவர் படுகாயமடைந்து உள்ளதாக பாட்னா ஜிஜி சஞ்சய் குமார் தெரிவித்து உள்ளார். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.