இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில் வரும் மே 2ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு..!
அரசு ஊழியர்களின் 25% சம்பள பிடித்தம் – அவசர சட்டம் பிறப்பிக்கும் மாநில அரசு..!
வரும் மே 2ம் தேதி சனிக்கிழமை தலைமைச்செயலகத்தில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் ஊரடங்கை மே 3 உடன் விலக்ககிக் கொள்ளலாமா அல்லது பகுதி வாரியாக நீட்டிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |