இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறையால் செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் பேரிடர் காலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 25% பிடித்துக் கொள்ளும் வகையில் கேரள அரசு அவசர சட்டத்தை பிறப்பிக்க உள்ளது.
இடைக்கால தடை:
கேரளாவில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால் அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்துக் கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்தது. அது 5 தவணைகளாக, ஒவ்வொரு மாதத்திற்கும் 6 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்துக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அரசு ஊழியர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அரசின் ஆணைக்கு 2 மாதங்கள் இடைக்கால தடை விதித்தனர்.
அவசர சட்டம்:
நீதிமன்றத்தில் இந்த உத்தரவினால் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து தெரிவித்த கேரள நிதியமைச்சர் டி எம் தாமஸ் இசாக், பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25% பிடித்தம் செய்யும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது.
அதன்படி மாதத்திற்கு 6 நாட்களுக்கான சம்பளம் பிடித்துக் கொள்ளப்படும். இதற்கு உரிய சட்டபூர்வ ஆதாரம் இல்லாததாக நீதிமன்றம் கூறியது, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் எனவும் தெரிவித்தார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |