தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் ஓட்டிற்காக பல செயல்களை செய்து வருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வருகிற மே மதத்துடன் முடிவுக்கு வரப்போகிறது. இதன் காரணமாக இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த தேர்தலில் வாக்கு சேகரிப்பாக பல செயல்களில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். ஒருத்தர் என்னவென்றால் வாக்கு சேகரிப்புக்காக தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாள் நிலவுக்கு சுற்று பயணம், வாக்காளர்களுக்கு ஐபோன் என அறிக்கைகளை வெளியிடுகிறார். மறுபக்கம் என்னவென்றால் மக்களை கவருவதற்கு வேட்பாளர் ஹோட்டலில் தோசை சுடுகிறார்.
மேலும் ஒரு பகுதியில் வேட்பாளர் ஒருவர் ஓட்டிற்காக ஒரு பெண் துணி துவைத்து கொண்டிருந்தார். அதனை பிடிங்கி அந்த துணியை அந்த வேட்பளர் துவைத்தார். இதுபோன்ற கேலி கூத்தான செயல்களை வேட்பாளர்கள் ஓட்டிற்காக செய்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு மக்களின் நினைப்பு இவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.