யாரு சாமி இவரு, எனக்கே பாக்கணும் போல இருக்கு?? தேர்தல ஜெயிச்சா 1 கோடி, ஐபோன், இல்லத்தரசிகளுக்கு ரோபோட்!!

0

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்காளர்கள் அனைவருக்கும் ஐபோன் வழங்கப்படும் என்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் மிக மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நடைபெரும் நேரத்தில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தலை நடத்துவது மிக கடுமையான ஒன்று. இருந்தும் கூட அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவதற்கு திட்டம் தீட்டி வருகின்றனர். மேலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

#INDvsENG ஒரு நாள் போட்டி – தவான்,கோஹ்லி அரைசதம்!வலுவான நிலையில் இந்தியா!!

தற்போது அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சரவணன் என்பவர் தான் ஜெயித்தால் வாக்காளர்களுக்கு ஐபோன், செயற்கை கடல், 10 பேருக்கு 100 நாட்கள் நிலவிற்கு பயணம், இல்லத்தரசிகளுக்காக வேலை செய்வதற்கு ரோபோ, மேலும் இளைஞர்களுக்கு ரூ.1கோடி என தாறுமாறாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனை அனைவரும் கலாய்த்து வருகின்றனர். இதுலாம் நடக்குமா என்று கலாய்த்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here