இந்திய அணியில் விளையாடி வரும் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம் வியப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
சூர்ய குமார்
T20 உலக கோப்பை தொடருக்கான சூப்பர் 12 ஆட்டங்கள் அனைத்திலும் இந்திய அணி அதிரடியாக விளையாடி அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். இந்த அரையிறுதி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வரும் சூர்ய குமார் யாதவை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது குறித்து பேசிய அவர் சூர்ய குமார் பேட்டிங் செய்யும் விதம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. இவரை வீழ்த்துவதற்கு எதிரணி பந்து வீச்சாளர்கள் மிகவும் திணறி வருகின்றனர். இவர் எதிரணி பவுலர்கள் வீசும் பந்தை எதிர்கொள்ளும் விதம் வியப்பை ஏற்படுத்தியதாக வசீம் அக்ரம் கூறியுள்ளார்.
T20 WC 2022: இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்?? உச்சகட்ட எதிர்பார்ப்பில் முன்னாள் வீரர்!!
அதுமட்டுமல்லாமல் T20 போட்டிகளில் சிறந்த பார்மில் இருக்கும் வீரர்களை வீழ்த்துவது மிகவும் சிரமம் என தெரிவித்துள்ளார். இவர் இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 225 ரன்கள் குவித்து அதிக ரன் அடித்தவர்களுக்கான பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார். இது தவிர ICC 20 ஓவர் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.