T20 WC 2022: இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்?? உச்சகட்ட எதிர்பார்ப்பில் முன்னாள் வீரர்!!

0
T20 WC 2022: இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்?? உச்சகட்ட எதிர்பார்ப்பில் முன்னாள் வீரர்!!
T20 WC 2022: இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்?? உச்சகட்ட எதிர்பார்ப்பில் முன்னாள் வீரர்!!

டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்க்க ஆவலுடன் உள்ளேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரின் 8வது சீசனில் சூப்பர் 12 சுற்றுகள் முடிந்த நிலையில், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நாளை போட்டி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, நாளை மறுநாள், இந்திய அணி இங்கிலாந்து அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த இரு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை உலக கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மோத உள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி உலக கோப்பை வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர், ஷேன் வாட்சன் இந்த உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டி வரை முன்னேறி மோதுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

புரோ கபடி 2022: பிங்க் பாந்தர்ஸ் & பாட்னா பைரேட்ஸ் அசத்தல் வெற்றி…, புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!

இதனை தொடர்ந்து, நடப்பு உலக கோப்பையின் முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதுவதை பார்க்க தவறி விட்டேன் என்று கூறியதோடு, இவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியானது மிக சிறந்த போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் இந்த இரு அணிகளும் 2007ம் ஆண்டு இறுதி போட்டியில் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டிக்குள் நுழைய முதலில் இந்த இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here