ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “செம்பருத்தி”. அந்த சீரியலில் நாயகியாக நடிக்கும் நடிகை ஜனனி இனி அந்த சீரியலில் நடிக்கப்போவது இல்லை என்ற தகவலை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
“செம்பருத்தி” சீரியல்:
சீரியல்கள் மூலமாக தான் பல நடிகைகளும் வெள்ளித் திரைக்கு வந்து சாதிக்கின்றனர். பெண்கள் விரும்பி தினமும் பார்ப்பது சீரியல் தான் என்பதால் அதில் வரும் நடிகைகளுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் “செம்பருத்தி”.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் நாயகியான ஐஸ்வர்யா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரை அந்த சீரியலின் நாயகனான ஆதி விரும்பி திருமணம் செய்து கொள்வார். இப்படி எளிமையான திரைக்கதை மற்றும் யதார்த்தமான கதைக்களத்தை கொண்டுள்ளதால் மக்கள் அதனை விரும்பி பார்த்தனர்.
அதிலும் குறிப்பாக மிகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தவர், ஜனனி. ஐஸ்வர்யாவாக மக்களின் மனதை கொள்ளையடித்திருப்பார். அவர் நேற்று ஒரு வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு இருந்தார். அதில் ஆரம்பத்தில் நன்றாக பேசி வந்தவர், திடீர் என்று அழுக ஆரம்பித்தார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது தான் இனி “செம்பருத்தி” சீரியலில் நடிக்க வேண்டாம் என்று ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
கதறி அழுதார்:
அந்த வீடியோவில் கூறிருந்ததாவது, “பார்ப்பவர்களுக்கு நான் நடிப்பது போல் தெரியலாம். ஆனால், அது எவ்வளவு ரணமாக கொல்கிறது என்று எனக்கு மட்டும் தான் தெரியும். நான் கடந்த 3 ஆண்டுகளாக அந்த சீரியலில் நடித்து வருகிறேன்”
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஒவ்வொரு நாளும் நான் ஐஸ்வர்யாவாக தான் வீட்டில் இருந்து புறப்படுவேன். எனது 4 வருட திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தை “செம்பருத்தி” நாடகம் பிடித்துள்ளது”
“எனக்கு புரிகிறது, நான் 2 சீரியலில் நடிப்பதால் கால்ஷீட் இல்லை என்று ஆனாலும் என்னால் இதனை ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ளது. தொடர்ந்து மக்கள் அந்த தொடருக்கு ஆதரவு தர வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
This is dad I wants old her I one come