சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

0

சசிகலா கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயர்ரத்த அழுத்தம்

கடந்த 20 தேதி பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின்பு சிறை தண்டனை முடித்து கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் இருந்தவாறே விடுதலையாக்கப்பட்டார்.

மீண்டும் இணையும் கௌதம், சிம்பு கூட்டணி – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்ளும் சசிகலாவுக்கு திடீரென உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அவருக்கு இன்சுலின் செலுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் சிகிச்சைகளை தொடரக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here