கொரோனா தடுப்பு நடவடிக்கை – கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

0

தற்போது தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் 12வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.

கொரோனா:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை பிறப்பித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 12 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் பொழுது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து வருவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைத்து மாவட்டங்களில் கொரோனா பரவல் குறித்தும் தகவல் கேட்டு வந்தார். இதனையடுத்தே சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் 12 வது கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் தற்போது உள்ள சூழ்நிலைகளில் அனைத்து துறைகளிலும் பல தளர்வுகளை அளித்துள்ளது அரசு. திரையரங்குகள் திறப்பு, சுற்றுலா தளம் திறப்பு என அனைத்து வகையிலும் தளர்வுகளை அளித்துள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளதால் தமிழக முதல்வர் மீண்டும் காணொளி மூலம் உரையாட உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்!!

இதனை தொடர்ந்து இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காலை 10.30 மணி அளவில் காணொளியில் உரையாட உள்ளார். மேலும் காலை 11.30 மணி அளவில் மருத்துவ நிபுணர்களுடன் உரையாட உள்ளார். இந்த உரையாடலில் அனைத்து மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை கேட்டறிய உள்ளார். மேலும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்புகள் மட்டுமே திறக்கப்படவுள்ளது. எனவே அடுத்த கட்ட தளர்வாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மற்ற வகுப்புகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here