மேற்கிந்திய அணியின் ஆல் ரௌண்டரான பொலார்டு மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி நேற்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த செய்தி தற்போது போலி என்று நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
பொலார்டு:
மேற்கிந்திய தீவு அணியின் ஆல் ரௌண்டராக திகள்பவர் தான் பொலார்டு. இவரது விளையாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வண்ணத்தில் இருக்கும். மேலும் இவரது பேட்டிங் மிக சிறப்பாக இருக்கும். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் பொலார்டு நம்பிக்கை நட்சத்திரம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த அணிக்காக தனது ஆட்டத்தை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு பொலார்டு தக்க பலமாக இருந்து வருகிறார். மேலும் இந்த ஆண்டிலும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். தற்போது இவரை பற்றி நேற்று ஓர் அதிர்ச்சியான செய்தி வெளியானது. அது என்னவென்றால் பொலார்டு நேற்று கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார் என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது.
சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
இதனால் இவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போனது. ஆனால் நேற்று இணையத்தில் பரவிய செய்தி போலி என்று நிருபிக்கப்பட்டுள்ளது. பொலார்டு தற்போது அபுதாபியில் நடக்கும் 10 ஓவர் தொடரில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் மூலம் பொலார்டு ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.