மீண்டும் இணையும் கௌதம், சிம்பு கூட்டணி – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மீண்டுமாக சிம்பு நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

சிம்புவின் புதிய படம்

கடந்த 2010 ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. பலரது காதல் காவியமான இப்படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் சிம்புவும் ஜெஸ்ஸியாக த்ரிஷாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியது. இந்த இரு படத்தின் பாடல்களும் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சிம்பு நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஈஸ்வரன்’. தொடர்ந்து ‘மாநாடு’ மற்றும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் சிம்பு தற்போது நடித்துவருகிறார். இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டுமாக மூன்றாவது முறையாக கைகோர்க்க உள்ளார் சிம்பு. சிம்பு நடிக்கும் 47 வது படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here