பரபரப்பான சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று தொடக்கம்!!

0

விவசாயிகள் போராட்டம், 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல், டிராக்டர் பேரணி வன்முறை என்று பல பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்:

டெல்லியில் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. மேலும் கடந்த குடியரசு தினவிழாவில் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதனால் பெரிய கலவரமே ஏற்பட்டது. மேலும் அதில் 300கும் மேற்பட்ட போலீசார் காயப்பட்டனர். விவசாய சங்கங்கள் மேல் 26கும் மேற்பட்ட வழக்கினை பதிவு செய்துள்ளனர் போலீசார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

19 பேரை அதிரடியாக கைதும் செய்துள்ளனர். தற்போது இன்று மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. மேலும் வரும் 1ம் தேதி அன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளனர். இந்த தொடர் 2 கட்டமாக நடக்கவுள்ளது. முதல் கட்டம் இன்று தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடைபெறும். பின்பு 2ம் கட்ட தொடர் மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கவுள்ளது. தற்போது இன்று தொடக்கவுள்ள தொடரில் குடியரசு தலைவர் உரையாற்ற உள்ளார். தற்போது அவரது உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளனர்.

மொத்தமாக 16 எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவரின் உரையை புறக்கணிக்கவுள்ளனர். காரணம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் மத்திய அரசுக்கும் பங்கு இருப்பது போல் தெரிகிறது என்றும் கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடியரசு தலைவரின் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை – 19 பேர் அதிரடி கைது!!

தற்போது இந்த பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளில் மேலும் மற்றொன்றாக இன்னும் சில மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது அனைத்து தரப்பு சூழ்நிலைகளும் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் இன்று மத்திய பொது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள்ளது. மேலும் டெல்லியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தலைவரின் உரையில் மத்திய அரசின் புதிய திட்டங்கள், மத்திய அரசு செய்த சாதனைகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here