நடிகை சமந்தாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டாலும் அவர் மற்ற நடிகைகளை போல் சமூக வலைத்தளங்களுக்கு முழுக்கு போடாமல் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் சமந்தா.
“தமிழில் அறிமுகம்”
கேரளாவை தனது பூர்விகமாக கொண்டு இருந்தாலும் தான் ஒரு தமிழ் பெண் என்று சொல்லுவதில் சமந்தா எப்போதும் பெருமை கொள்வார். தனது சிறுவயதிலேயே அவர் சென்னைக்கு வந்ததால் அவர் இவ்வாறு சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டு கொள்வார். தமிழ் திரையுலகில் முதன்முதலாக “மாஸ்க்கோவின் காவேரி” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதன் பின், தெலுங்கு திரையுலகில் கவுதம் மேனன் இயக்கிய “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் ரீமேக்கில் நடித்தார். அந்த படம் அவரை பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. அவரது கியூட்டான மற்றும் அவரது யதார்த்தமான நடை காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வெற்றிகரமாக திரையுலகில் வலம் வந்தார்.
புதிய தோற்றம்:
அதன் பின் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகனான நாகசைதன்யாவை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் புதிதாக ஒரு போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பீட்டர் பாலை நிர்கதியாக வீதியில் அலைய விட்ட வனிதா – நண்பர்களும் கைவிட்ட சோகம்!!
அவர் புகைப்படங்களில் அவர் அணிந்திருக்கும் ஆடைக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவர் அணிந்திருப்பது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட ஆடை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆடையின் விலை ரூ.27,000.
அந்த உடையில் பல வித வண்ணங்கள் இணைக்கப்பட்டு சமந்தா தேவதையாக ஜொலிக்கிறார். தற்போது இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிகிறது.