திருமணம் முடிந்து வெறும் 5 மாதங்கள் கூட முழுமையாக நிறைவு பெறாத நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது தனது கணவரான பீட்டர் பாலை வீதியில் நிர்கதியாக நிறுத்தியுள்ளார். அவரது செயல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
“கோலாகலமான திருமணம்”
கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் விட்டு வெளியே வந்ததும், தனியாக ஒரு யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சமையல் குறிப்புகள் மற்றும் பல விதமான பயனுள்ள விஷயங்களையும் பதிவேற்றினார். அப்போது அவருடன் வேலை பார்த்த பீட்டர் பால் என்பவர் மீது காதல் ஏற்பட்டது. இதனால் பீட்டர் பாலை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இதனை பலரும் எதிர்த்தனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
காரணம், பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. கூடுதலாக அவர் அதிகமாக குடிப்பதால் தான் அவரது முதல் மனைவி அவரை விட்டு விலகி சென்றுள்ளார் என்று பலரும் வனிதா விஜயகுமாருக்கு அறிவுறுத்தினர். ஆனால், வனிதா யார் பேச்சினையும் கேட்கவில்லை, அதே போல் அவரது நலத்துக்கு என்று சொன்னவர்களையும் சரமாரியாக சமூக வலைத்தளத்தில் திட்டினார். அதன் பின், தனது கணவர் பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
நண்பர்கள் வீட்டில் தஞ்சம்:
இப்படியாக இருக்க அவரது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பீட்டர் பால் அளவுக்கு அதிகமாக குடித்து இருக்கிறார். அதனால் வனிதா தனது குழந்தைகளுடன் வீடு திரும்பிவிட்டார். அவர் தற்போது பீட்டர் பாலை பிரேக் அப் செய்தது போல் தான் தனியாக இருந்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக, அவரது கணவர் பீட்டர் பால் எங்கு உள்ளார்? என்ன ஆனார்? என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. வனிதாவை விட்டு பிரிந்ததும் அவர் முதலில் தனது நண்பர்களின் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு சென்றும் கூட அவர் அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவர்களது நண்பர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
ஆனால், அது எதையும் கேட்காத பீட்டர் பால் தொடர்ந்து குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத அவரது நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவரை தங்களது வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். அவர் எப்போது குடி பழக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வருகிறாரோ? அப்போது தான் அவரிடம் பேசுவோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் அவர் தற்போது வீதிகளில் தான் சுற்றி வருகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இப்படியாக இருக்க வனிதா தற்போது டிவி தொடர்கள் மற்றும் சீரியல்கள் நடிப்பதில் பிஸி ஆகிவிட்டார். இதனால் தற்போது பீட்டர் பால் தனி மரமாக வீதியில் நிர்கதியாக உலவி வருகிறார்.