கொரோனா பரவலக்குக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து:
கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த பலரும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஷ்யா நாட்டு அரசு தீவிரமாக இந்த பணிகளில் இறங்கி வந்தது. மாஸ்கோவின் கமலேயா நிறுவனம் மற்றும் ரஷ்யா நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சேர்ந்து ஒரு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனை வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு தர உள்ளனர். இதன் மூலமாக உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை ரஷ்யா அரசு தர உள்ளது.
உறுதி செய்துள்ளது:
நாட்டின் துணை சுகாதார அமைச்சர் ஒலெக் கிரிட்னேவ் இந்த செய்தியினை உறுதி செய்துள்ளார். ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கடந்த சில நாட்களுக்கு முன் தான் இந்த தடுப்பு மருந்திற்கான இறுதி கட்ட பரிசோதனைகள் முடிவடித்துள்ளது என்றும் நல்ல பலன்களை தந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவரின் உருக்கமான கடைசி பேஸ்புக் பதிவு!!
மேலும் இந்த தடுப்பு மருந்தினை முதலில் மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த ஆகஸ்ட் மாதமே தர உள்ளோம் என்று தெரிவித்து இருந்தார். உலகில் அதிகமாக கொரோனா பாதித்த நாடுகளில் ரஷ்யா 4 ஆம் இடத்தில் உள்ளது.