கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடித்து வெளியான “மாரி 2” படத்தில் இடம்பெற்ற “ரவுடி பேபி” பாடல் யூடியூபில் 100 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையினை பெற்றுள்ளது. இதனால் அந்த படத்தின் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
“மாரி 2” திரைப்படம்:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். அவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி ஹிந்தி படங்களில் கூட நடித்துள்ளார். அவர் நடித்த “மாரி” என்ற படம் அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் “மாரி 2” என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் மற்றும் கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை என்று கூறினாலும் படத்தின் பாடல்கள் மிக பெரிய வெற்றியினை அடைந்தது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அனைவரையும் கவர்ந்த பாடல் “ரவுடி பேபி” தான். இந்த பாடல் தீ என்ற பின்னணி பாடகியால் பாடப்பட்டது. இந்த பாடலில் நடனம் மற்றும் இசை இரண்டும் நன்றாக இருந்ததால் அனைவராலும் அதிகமாக கேட்டு ரசிக்கப்பட்டது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 100 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையினை பெற்றுள்ளது.
தனுஷ் மகிழ்ச்சி:
இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். யூடியூப் நிறுவனம் சார்பில் 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தோசத்தை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது, “யூடியூபில் 100 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையினை “ரவுடி பேபி” பாடல் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்காக எனது மொத்த குழுவிற்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தானுஷிற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் பிரேம்ஜி, பிரபு தேவா என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.