உத்திரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்ட் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உத்திரகண்ட்:
உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் தபோவான் என்னும் பகுதி அருகே நீர் மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு 100 பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யாரும் எதிர்பாராத வகையில் பனிப்பாறைகள் வெடித்து சிதறி அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள தெலளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட 100 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ரிஷப் பாண்ட் ட்வீட்:
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 பேர் தற்போது உயிர் இழந்துள்ளனர். மீதமுள்ளவர்களை தற்போது தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் இறங்கியுள்ளனர். தற்போது இதனால் பாதித்தவர்களுக்கு இந்தியா கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்ட் நிதியுதவி வழங்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய ரிஷப் பாண்ட் கூறியதாவது, உத்திரகண்ட் வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல் மற்றும் பிராத்தனைகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
#INDvsENG டெஸ்ட் – 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!!
மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நீலையில் பாதிப்படைந்தவர்களுக்கு அவர்கள் கண்டிப்பான முறையில் உதவுவார்கள் என நம்புகிறேன் என்று தெரிவிவித்த்துள்ளார். மற்றொரு ட்விட்டில் அவர் கூறியதாவது, உத்திரகண்ட் பாதிப்பில் உயிரிழந்தவர்கள் குறித்து நான் வருந்துகிறேன், மேலும் நான் விளையாடும் போட்டியில் கிடைக்கும் ஊதியத்தை மீட்பு பணிக்காக வழங்குகிறேன், அதுமட்டுமல்லாமல் பொது மக்களையும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.