6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

0
Rain
Rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் வீடுகளுக்குள் புகும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலக பகுதியில் 11 செமீ, ராமநாதபுரம் மண்டபம் 10 செமீ மற்றும் குறைந்தபட்சமாக திருவள்ளூர், திருநெல்வேலி பகுதிகளில் 3 செமீ மழை பதிவாகி உள்ளது. மீனவர்களுக்காக எவ்வித எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here