மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த 7 மாத கர்ப்பிணி கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று உயிர் இழந்தார்.
மதுரையில் கொரோனா:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு பல முயற்சிகளை அரசு சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப நாட்களில் மதுரையில் 10 க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர் .
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அதனால் அரசும் பொது முடக்கத்திற்கு தளர்வுகளை விதித்தது. ஆனால், அதன் பிறகு மதுரையிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. 1000 திற்கு மேற்பட்டோர் பாதிக்கபட்டு உள்ளனர். அதனால் மீண்டும் அரசு முழு பொது முட்டகத்தை அமல்படுத்தி உள்ளது. இந்தநிலையில், நேற்று ஒரு கர்ப்பிணி பெண் கொரோனாவால் உயிர் இழந்து உள்ளார்.
கொரோனா தொற்று உறுதி:
மதுரை அரசு மருத்துவமையில் விருதுநகர் அல்லம்பட்டி சேர்ந்த 7 மாத கர்ப்பிணி(வயது 34) ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா உள்ளதா என்று உறுதி செய்ய மருத்துவர்கள் மாதிரிகள் எடுக்க பட்டு உள்ளது.
முச்சு திணறல்:
இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென்று முச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. அவர் திணறல் ஏற்பட்டு பரிதமாக உயிர் இழந்தார். அதற்கு பின் கொரோனா வந்து உள்ளது, அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி என்று பரிசோதனை முடிவுகள் வந்து உள்ளது.