தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை ஊரடங்கு சமயத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிறையிலேயே இறந்தனர்.
அவர்களை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதே இறப்புக்கு காரணம் என்று குற்றம்சாட்டி சாத்தான்குளத்தில் நேற்று முன்தினம் வியாபாரிகளும்,உறவினர்களும் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
முழு கடையடைப்பு..!
இந்நிலையில், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
மேலும் ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே 30ம் தேதி அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடைபெறும் என்றும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.