இந்த ஆண்டு வழங்க இருக்கும் பொங்கல் பரிசினை ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பயோமெட்ரிக் முறையில் பல தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்ட காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறை:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த ஆண்டு பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர் தனது கைரேகையினை பதித்து தான் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பல கோளாறுகளை ஏற்படுத்தியது. பலருக்கும் கை ரேகை பதியவில்லை. இதன் காரணமாக இந்த முறை ஒரு சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது, பொங்கல் பரிசு அறிவிப்பு வெளியான நிலையில் கைரேகை இல்லாமல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தமிழக அரசு தான் முடிவினை எடுக்கும் என்று அமைச்சர்கள் பலரும் பேட்டி அளித்தனர். இது குறித்து தற்போது அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
லண்டனில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!
அவர் கூறியதாவது, “மக்கள் அனைவரும் கைரேகை வைக்காமல் தங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டினை காட்டி பொங்கல் பரிசுத் தொகை மற்றும் இதர பொருட்களை பெற்று கொள்ளலாம். கைரேகை வைப்பது தொடர்பாக பல புகார்கள் எழுந்து வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுகள் வழங்கல் வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கி 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.