நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நடைபெற்று வந்த RTO விசாரணை முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை மரணம்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்ய தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் தன்னுடைய மகன் நிரபராதி எனவும், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் மிரட்டப்பட்டதாலே சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். உண்மைகளை கண்டறிந்து தனது மகனை விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு அவ்வழக்கு RTO விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஸ்ரீ பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை மேற்கொண்டு வந்தார். சித்ராவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஹேமந்த் குடும்பத்தினர் மற்றும் உடன் நடித்தவர்களிடமும், நெருங்கிய தோழி சரண்யாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
லண்டனில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!
இன்று சித்ராவின் உதவியாளர் ஆனந்திடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிறகு இவ்வழக்கின் மீதான RTO விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மீதான RTO விசாரணை அறிக்கை இன்னும் நாட்களில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.