லண்டனில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

0

லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அது புதிய வகை கொரோனா தொற்றா? என்று கண்டுபிடிப்பதற்காக அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கொரோனா:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவிலுருந்து கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தற்போது அந்த கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ் இங்கிலாந்து நாட்டில் பரவி வருகிறது. இது 70 சதவீதம் வீரியம் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது. அதானால் உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்துக்கான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. மேலும் இங்கிலாந்து நாட்டில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது லண்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிண்டி கிங் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது “லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தாராளமாக உயரும் தங்கத்தின் விலை!!

இது உருமாறிய கொரோனாக்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மேலும் இவர்களுக்கு புது வகை கொரோனா ஏற்பட்டுள்ளதா? என்பது தெரிவதற்காக இவர்களது மாதிரிகள் புனேக்கு அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here