தருமபுரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீருடை பணியாளர்கள் தேர்வு:
தமிழக அரசு மாநிலம் முழுவதும் சீருடைப் பணியாளர்களை பலகட்ட தேர்வின் மூலம் தேர்ந்து எடுக்கும். தருமபுரியில் நடக்க இருக்கும் காவல்துறைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 13 அன்று சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இதற்காக தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில், தர்மபுரி மாவட்டத்தில், நாளை (13ல்), சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை போலீஸ், சிறை காவலருக்கான எழுத்து தேர்வு, 28 மையங்களில் நடக்கிறது. அதன்படி, தேர்வுகளை, 21 ஆயிரத்து, 853 ஆண்களும், 4,009 பெண்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் என, மொத்தம், 25 ஆயிரத்து, 863 பேர் எழுத உள்ளனர்.
ஆன்லைனில் அரியர் தேர்வுகள் – பாரதியார் பல்கலை அறிவிப்பு!!
தேர்வர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். மையத்திற்கு உள்ளே, ஸ்மார்ட் வாட்ச், மொபைல்போன், கால்குலேட்டர், ப்ளூடூத் செட் போன்ற மின்சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை. உரிய நேரத்திற்குள் தேர்வர்கள் வர வேண்டும். தேர்வின்போது முறைகேடு, ஒழுங்கீனமாக செயல்படும் நபர்கள், தகுதி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.