நேற்று முன் தினம் வனிதாவை திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலின் மீது அவரது முன்னாள் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
வனிதா:
இவர் நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா இவர்களின் மகள் ஆவர். நடிகர் விஜய்யின் “சந்திரலேகா” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர், நடிகை வனிதா. அதன் பின் படவாய்ப்புகள் கிடைக்காமல் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு மகனும் , இரு பெண்குழந்தைகளுக்கு உள்ளனர். வனிதா, முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாவது ஆக ஒருவரை மணம் முடித்து, அவருடனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இப்படியான நிலையில் வேறு ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்து வந்தார், வனிதா.
பிக்பாஸ் என்ட்ரி :
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தனியார் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ்” ரியாலிட்டி ஷோவ்வில் பங்கேற்றார். அதில், சண்டைக்கு பேர் பெற்றவராக இருந்தார். இதன் மூலம் பலருக்கும் தெரிந்த பிரபலமாக மாறினார்.
தற்போது, பீட்டர் பால் என்பவரை காதலித்து நேற்று முன் தினம் திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்கள் இதற்காக எழுந்தது. கிறித்தவ முறைப்படி அவர் திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் மீது புகார்:
வனிதாவை திருமணம் செய்து கொண்ட பீட்டர் மீது அவரது முதல் மனைவி, எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதில் பீட்டர் தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டு உள்ளார் என்று புகார் அளித்து உள்ளார்.
கருத்து வேறுபாட்டால் கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் மற்றும் அவரது மனைவி எலிசபெத் பிரிந்து வாழ்கின்றனர். எலிசபெத்தை முறையாக விவாகரத்து செய்த பின், தான் வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி உள்ளார், பீட்டர்.
சாத்தான்குளம் சம்பவம் விவகாரம் சிபிஐக்கு மாற்றம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!
ஆனால், அதனை செய்யாமல் பீட்டர் வனிதாவை திருமணம் செய்து உள்ளார். இதனால், அவரது மனைவி பீட்டர் மீது புகார் தெரிவித்து உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.