நேற்று காங்கோ குடியரசில் எரிமலை வெடித்து சிதறியது. இதனால் பல மக்கள் தங்களது உயிரை இழந்தனர். இந்நிலையில் தற்போது எரிமலைக்கு முன்பு நின்று கொண்டு இளைஞர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
காங்கோ எரிமலை:
உலகம் முழுவதும் தற்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு பக்கம் நோய்ப்பாதிப்பு, மறுபக்கம் பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் இயற்கை பாதிப்பு போன்ற பல இன்னல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது அந்த வகையில் நேற்று காங்கோ குடியரசு பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் சுமார் 32 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. தற்போது காங்கோ குடியரசிற்கு பிற நாடுகள் தங்களால் இயன்ற உதவியினை செய்து வருகின்றது. இந்நிலையில் காங்கோ குடியரசில் உள்ள இளைஞர்கள் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அதன்படி அந்த பகுதியில் உள்ள மக்கள், வெடித்த எரிமலைக்கு முன்பு சென்று தங்களது போனில் செல்ஃபி எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகிறது.