பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் யாரும் எதிர்பார்த்திராத விதமாக பல காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. தனத்திற்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படவே கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் மீனா வேறு வீட்டிற்கு வந்ததில் இருந்து குழந்தை அழுதுகொண்டு வேறு உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த சீரியலில் சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். அதன் பிறகு வீட்டிற்கு வரும் மீனா வழக்கம் போல பல சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். நேற்றைய எபிசோடில் தனத்திற்கு தான் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் வர மெடிக்கலுக்கு டெஸ்ட் கார்டு வாங்க செல்கிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த நேரம் பார்த்து மீனாவின் குழந்தை வேறு அழுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் மீனா கஷ்டப்பட்டு குழந்தையை சமாதானம் செய்கிறார். மேலும் மீனா குழந்தையிடம் கோவமும் படுகிறார். அப்பொழுது முல்லை அங்கு வரவே அவருக்கு உதவி செய்கிறார்.
மீனா தனத்தை முல்லையிடம் சொல்லி திட்ட முல்லை அவருக்கு உடம்பு சரியில்லை என்று கூறுகிறார். ஆனால் மீனா அதனை கேட்கும் மனப்பக்குவத்தில் இல்லை. திரும்ப திரும்ப தனத்தையே குறை கூறுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தனம் மெடிக்கலுக்கு போய் எப்படி வாங்குவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டுள்ளார். சரி என்று வேறு வழியில்லாமல் கடைக்கு சென்று வாங்கியும் விடுகிறார். இதனால் மீனா மறுபடியும் கோவமடைகிறார்.
எங்க வீட்டிலேயே இருந்து இருக்கலாம் என்று கோபமடைந்து செல்கிறார். முல்லை எவ்வளவு சமாதானம் சொல்லியும் மீனா கேட்கவே இல்லை. தனம் ரூமில் அமர்ந்து டெஸ்ட் கார்டை பார்த்துக்கொண்டுள்ளார். எங்கே பாசிட்டிவ் வந்து விடுமோ என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்.
அதன் பின் முல்லைக்கும் உடல் நிலை சரியில்லாமல் போக தனம் அவரை கவனித்து கொள்கிறார். அங்கு மீனாவும் வர உடம்பு சரியில்லாததை பார்த்து விசாரிக்கிறார். அதன் பின் தனத்திற்கு மீண்டும் தலை சுற்றுகிறது. என்ன என்று கேட்டதற்கு இரவு முழுவதும் தூங்காததால் இப்படி இருக்கிறது என்று கூறி சமாளிக்கிறார். ஆனால் முல்லைக்கு ஏதோ சந்தேகம் எழுகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது. இந்த காட்சிகளை வைத்து பார்க்கும்போது முல்லைக்கு விஷயம் கண்டிப்பாக தெரியவரும். மேலும் தனம் கர்ப்பமாக இருப்பதும் உறுதியாகும்.