விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கதிர், முல்லை ஜோடிக்கே மவுசு அதிகம். தற்போது இவர்கள் இருவருக்கும் எப்பொழுது ரொமான்ஸ் சீன் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 மணி நேர தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இது வரையில் கண்ணால் மட்டும் பேசி வந்த ஜோடிகளான கதிர், முல்லை தற்போது நேரடியாக ரொமான்ஸில் இறங்கியுள்ளனர். இப்பொழுது கெஸ்ட் ரோலில் மைனா நந்தினி மற்றும் யோகேஷ் நடித்து வருகின்றனர்.
தனது அண்ணண், அண்ணி விஷயமாக சென்னைக்கு செல்லும் கதிர், முல்லை மைனா நந்தினி வீட்டில் தங்குகின்றனர். அங்கு பலநேரம் தனியாக இருக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் அதனை அனுபவிக்க முடியாமல் போகிறது. இதற்கிடையில் முல்லை, கதிருக்காக சட்டை எடுக்க போய் கடையில் மாட்டிக்கொள்கிறார்.
அதன் பிறகு தான் கதிர் முல்லையை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். சரி இனிமேலாவது ரொமான்ஸ் சீன் இருக்குமா?? என்று பார்த்தால் அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் முல்லை நல்லபடியாக திரும்பி வந்தால் விரதம் இருக்கிறோம் என்று வேண்டிக் கொள்ள ஷாக் ஆனது கதிர் மட்டுமல்ல ஒட்டுமொத்த ரசிகர்களும் தான். அப்போ எப்போ தாங்க முல்லை கதிருக்கு ரொமான்ஸ் சீன் வைப்பீங்க?? என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
இன்றைய எபிசோடில் அதற்கான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் கதிரும் முல்லையும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டுள்ளனர். அப்பொழுது முல்லையின் கையை முதன்முதலாக தொடுகிறார் கதிர். அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் கூப்பிட்டு விட முல்லையும் எழுந்து செல்கிறார். மக்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்த ஜோடிக்கான ரொமான்ஸ் சீன் விரைவில் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.