‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எடுத்த புதிய முயற்சி – ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா??

0

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுமத்தினர் தனது சீரியலில் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் மக்கள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த சீரியலில் அனைவராலும் கவரப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் அது முல்லை கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரம் மூலம் தான் சித்ரா மிகவும் பிரபலமானார். மேலும் அவர் யாரும் எதிர்பாராத வகையில் தற்கொலை செய்துகொண்டார். இது அனைவரையும் அதிரவைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சித்ராவின் மறைவுக்கு பின்பு முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வந்தது. இந்த சந்தேகத்தை போக்கும் வகையில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடிக்க தொடங்கினர். காவ்யா முல்லை கதாபாத்திரத்தில் பல நாட்களாக நடித்த பின்பு ரசிகர்கள் அவரை முல்லையாக ஏற்றுக்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த சீரியலில் புதிய எண்ட்ரியாக ஓர் நடிகை அறிமுகமானார். பொதுவாக புதிய நடிகை அறிமுகமானான் சீரியலில் சண்டை அதிகரிக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை – வானிலை மையம் தகவல்!!

புதிய முயற்சி:

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுமத்தினர் ஓர் புதிய முயற்சியை கையாண்டுள்ளனர். இந்த முயற்சியை விஜய் தொலைக்காட்சியில் யாரும் இதுவரை செய்யாத ஒன்று. இதுவே முதல் முறையாகும். அது என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகர்கள் பேசும் பொது அவர்களின் வசனங்கள் திரையின் கீழ் தமிழில் ஒளிக்கப்படும் என்பதே. இது பார்ப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here