அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழையும் சில மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக காட்சியளிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
இலங்கைக்கு கிழக்கு திசையில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யும். மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவக்கூடும். மேலும் வரும் 22.01.2021 அன்று தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வரும் 23.01.2021 முதல் 25.01.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.
தளபதி 65 இல் நடிக்கும் ‘விஜய் டிவி’ பிரபலம் – ரசிகர்கள் குஷி!!
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி மற்றும் குறைந்த பட்சமாக வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.