விஜய் டிவியில் பிரபலமாக ஓடும் சீரியல் தான் பாண்டியர் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியல் குடும்பத்தினர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தினமும் இரவு ஆனதும் அனைத்து வீடுகளிலும் ஓடும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஓர் கூட்டு குடும்பத்தில் வரும் சண்டை சர்ச்சரவுகள் மற்றும் சந்தோசங்கள் ஆகியவற்றை இந்த சீரியல் மிக அற்புதமாக மக்களுக்கு வெளிக்காட்டி வருகிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்வது எவ்வளவு சிரமம் என்பதையும் இந்த சீரியல் புரிய வைக்கிறது. மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மக்கள் அனைவரும் இந்த சீரியலின் ஓர் எபிசோட் விடமால் பார்த்து வருகின்றனர். தற்போது இந்த எபிசோடில் ஒரு பக்கம் முல்லை மற்றும் கதிரின் ரோமன்ஸ் சீன், மற்றொரு பக்கம் மீனாவின் அப்பா புதிய கடை திறந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸின் வியாபாரம் குறைந்து விட்டது. இதனால் குடும்பமே கவலை அடைந்தனர். இதுபோல் இந்த சீரியல் மிக சூடுபிடித்துள்ளது.
என்னடா தனுஷுக்கே வந்த சோதனை – “கர்ணன்” படத்தின் மீது வழக்கு!!
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் அனைவரும் எதோ விழாக்கு செல்லும் வகையில் பட்டு வெட்டி சட்டை மற்றும் பட்டு சேலையில் குடும்பத்தோடு சேர்ந்து ஓர் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.