பிரபல மல்யுத்த வீராங்கனை தற்கொலை – பைனலில் தோற்றதால் எடுத்த விபரீத முடிவு!!

0

பிரபல மல்யுத்த வீராங்கனை யாரும் எதிர்பாராத வகையில் தற்கொலை செய்துள்ளார். தற்போது இவருக்கு பல தரப்பினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்,

ரித்திகா போகாட்:

பிரபல மல்யுத்த வீராங்கனையான கீதா மற்றும் பபிதா ஆகியோரின் உறவினர் தான் ரித்திகா போகாட். இவரும் தனது உறவினர்களை போல் மல்யுத்த விளையாட்டில் சிறந்தவராக விளங்க எண்ணினார். அதற்காக இவரும் மல்யுத்த பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இவர் மல்யுத்த பயிற்சியை மிக தீவிரமாக மேற்கொண்டார். 17 வயதுடைய ரித்திகா போகாட் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்த மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

9 வருடத்திற்கு முன்பு இதே தினத்தில் நிகழ்ந்த சோகம் – மெமரிஸ் பிரிங் பேக்!!

இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய ரித்திகா போகாட் இந்த தொடரின் இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தினார். ஆனால் இதன் இறுதி போட்டியில் எதிர்பாராத விதமாக ரித்திகா போகாட் தோல்வியை தழுவினார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ரித்திகா போகாட் உள்ளானார். இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தனது மாமா வீட்டில் தற்கொலை செய்துள்ளார் ரித்திகா போகாட். தற்போது இவரது மறைவிற்கு விளையாட்டு வீரர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here