ஆலியா மானசா மனசுக்குள்ள இப்படி ஒரு சோகமா?? கவலையில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது விஜய் டெலீவிஸன் அவார்ட்டுக்கான முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ஆலியா மானசா தனது செயலால் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார். பலரும் அவருக்கு ஆறுதலளித்து வருகின்றனர்.

ஆலியா மானசா

விஜய் டிவியில் தற்போது எங்க வீட்டு மஹாலக்ஷ்மி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. போன வாரத்தில் சிறந்த குடும்பம் என்ற தலைப்பில் விஜய் டெலீவிஸன் அவார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. பலரும் தங்களது திறமையை காட்டி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல் குடும்பமும் இதில் பங்கேற்றுள்ளனர்.

பல ஆரவாரங்களுடன் ப்ரோமோக்களும் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆலியா மானசா இந்த நிகழ்ச்சியில் தனது பெர்ஃபார்மண்ஸை கொடுத்திருப்பார். அதாவது படுத்துக்கொண்டே தனது அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பியை பாக்கணும் பாப்பு என்று கதறியிருப்பார். இது பலரையும் கண்கலங்க வைத்தது.

ராஜா ராணியில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ச்சனா இது அவளின் ஆழ்மனதில் இருக்கும் கவலை அதை தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறாள் என்று கூறியுள்ளார். மேலும் மகேஷ் அவர்களும் ஆலியா எங்கள் வீட்டு மஹாலக்ஷ்மி, அவளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆலியாவிற்குள் இவ்வளவு சோகம் மறைஞ்சிருக்கா?? என்று கவலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here