முல்லையின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் கதிர் – மறுபடியும் ரொமான்ஸில் முடிந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து இரவு  முழுக்க வாந்தி  எடுத்ததால் மூர்த்தி தனத்திற்கு சமைத்து  தருகிறார். இதனை தண்ணீர் குடிக்க வரும் முல்லை பார்த்து விட இதெல்லாம் புதுசா இருக்கே என்று சந்தேகப்பட்டு கதிரிடம் கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன் அண்ணன் அண்ணி மாறிவிட்டதாக சந்தேகிக்கிறார் ஜீவா. மேலும்  முல்லைக்கும் இந்த  சந்தேகம் இருக்க கதிரிடமும் கூறுகிறார். ஆனால் கதிரோ அண்ணன் அண்ணி என்ன செய்தாலும் அது நல்லதுக்கு தான் இருக்கும் என்று கூறிவிட்டு தூங்க செல்கிறார். இதனால் கடுப்பாகும் முல்லைக்கு இதில் ஏதோ விஷயம் உள்ளது போலவே தோன்றுகிறது.

மேலும் இரவில்  வாந்தி  எடுத்து  விட்டு பசியில் இருக்க மூர்த்தி அவருக்கு சமைத்து கொடுக்கிறார். இதனை முல்லையும் பார்த்து விட மேலும் சந்தேகம் எழுகிறது. கதிரிடம் வந்து சொல்ல அதனை கண்டுகொள்ளவே  இல்லை.

டாக்டராக ரீஎன்ட்ரி கொடுக்கும் துர்கா – அப்போ வெண்பாவிற்கு ஆப்பு நிச்சயம்!

காலை விடிந்ததும்  கதிர்  வந்து  ஏன்  நைட் தூங்கல என்று  தனத்திடம் கேட்க வாந்தி தலை  வலி என்று  சொல்ல  இன்னும்  நிக்கலையா? என  அனைவரும்  கேட்க கூடிய சீக்கிரம் நின்று விடும் என்று சிரிக்கிறார். மேலும் மதியம் சமைக்க வேண்டாம் கடையில்  சாப்பிட்டு கொள்கிறோம்  என்று  மூர்த்தி சொல்ல  அதெல்லாம் வேண்டாம் என சமைக்க செல்கிறார் தனம். அவரின் பின்னாடியே  செல்கிறார் மூர்த்தி.

கதிருக்கு முல்லை சொல்வது சரி தான் என்றும் தோன்றுகிறது. மேலும் இன்று முல்லையின்  பிறந்தநாள் வேறு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு ‘எனக்காக பிறந்தவளே’ என எழுதி சேலையை  வைத்திருந்தார். இதனை பார்த்த முல்லைக்கு சந்தோஷமாகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக மூர்த்தி  வீட்டில் பாத்ரூம் கட்ட காண்ட்ராக்டரிடம் போய் பேசுகிறார். அதன் பின் முல்லையை கோவிலுக்கு அழைத்து செல்கிறார் கதிர். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here