பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை நாட்கள் வெண்பாவிற்கே அனைத்தும் சாதகமாக நடந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் வெண்பாவின் ஹாஸ்பிடல் இழுத்து மூடும் அளவிற்கு மாறிவிட்டது. மேலும் எதிரில் புதிதாக ஹாஸ்பிடல் ஆரம்பிப்பது வேறு யாரும் இல்லை துர்கா தான்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மகள் லட்சுமி ஸ்கூலுக்கு போகாமல் வேலைக்கு சென்று வந்ததை தெரிந்த கொண்ட கண்ணம்மா திட்டி தீர்க்கிறார். அதற்கு லட்சுமி நீ சென்னைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். அதன் பிறகு வெண்பா ஹாஸ்பிடல் நட்டத்தில் ஓட என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் எதிரில் வேறு ஒரு ஹாஸ்பிடலும் திறக்கின்றனர். அது யார் என்ற குழப்பத்திலேயே உள்ளார் வெண்பா. இன்றைய எபிசோடில் வெண்பா ஹாஸ்பிடலுக்கு வர எதிரில் உள்ள போர்டை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதில் 3 மாதங்களுக்கு இலவச மருத்துவம், ஏழைகளுக்கு முற்றிலும் இலவசம் என எழுதப்பட்டிருந்தது.
பார்த்துவிட்டு உள்ளே சென்றால் யாருமே இல்லை. எங்கே என்று கேட்டதற்கு எல்லாரும் எதிர் ஹாஸ்பிடலுக்கு வேலைக்கு சேர்ந்து விட்டதாக சொல்ல வெண்பாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யார் அந்த டாக்டர் என்று யோசிக்கும் நேரத்தில் அங்கு வருகிறார் துர்கா. துர்காவை பார்த்ததும் அதிர்ச்சியடையும் வெண்பா எப்படி இங்க வந்த என்று கேட்கிறார்.
‘மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்’ – முதல்வருக்கு கொலை மிரட்டல் கடிதம்!!
இந்த 8 வருஷத்தில் எப்படியோ தில்லுமுல்லு பண்ணி நான் டாக்டர் ஆகிட்டேன் என்று சொல்ல வெண்பா சிரிக்கிறார். இது எவ்ளோ பெரிய குற்றம் தெரியுமா?? என கேட்க அதை துர்கா காதில் வாங்கவே இல்லை. இப்போ நானும் டாக்டர் எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் என்று கேட்க வெண்பாவிற்கு கோவம் வருகிறது.
அடுத்ததாக கண்ணம்மாவை காட்ட லட்சுமி சென்னைக்கு சென்றே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இதனால் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறார். அதனை பார்த்த கண்ணம்மாவிற்கு தன் அத்தை சௌந்தர்யாவை பார்ப்பது போலவே உள்ளது. கடைசியாக சென்னைக்கு வருவதாக ஒத்துக்கொள்கிறார். சௌந்தர்யாவின் வீட்டில் ஹேமாவிற்கு சாப்பாடு ஊட்டுகிறார் அஞ்சலி.
கோவப்பட்டுக் கொண்டே ஊட்டிவிட ஹேமாவிற்கு மனசு கஷ்டமாகிறது. மேலும் அஞ்சலி நீ என்ன பெரிய மகாராணியா?? உடம்பு முழுக்க விஷம், நீ என்னைக்கு இந்த வீட்டில் கால் எடுத்து வட்சியோ அப்போவே என் மரியாதையே போய்டுச்சு. நான் என்ன உன் அம்மா கூட பிறந்தவளா?? என்று திட்ட சௌந்தர்யா கேட்டு விடுகிறார். அஞ்சலி என்று கத்த அதோடு எபிசோடும் முடிவடைகிறது.