‘கதிர், முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வந்தாச்சு’ – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது இத்தனை நாட்களாக எப்பொழுது கதிர் முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வரும் என அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த எபிசோடு வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லைக்கு அவரின் அம்மா உடல்நலம் பற்றி தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைகிறார் முல்லை. மீனா இதனை உளறியதால் குடும்பமே அவர் மீது காண்டில் உள்ளனர். எப்படி இதனை முல்லையிடம் சொல்லலாம் என தனம் சண்டையிடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படியாவது தெரியதானா போகுது என்று அசால்டாக சொல்கிறார் மீனா. வீட்டில் உள்ள அனைவரும் முல்லையை சமாதானம் செய்கின்றனர். கதறி அழும் முல்லை தன்னால் இந்த குடும்பத்திற்கு பிரச்சனை தான், ஏற்கனேவே காசு இல்லாத இந்த நேரத்தில் எங்க அம்மாவிற்கு இப்படி நடந்த அந்த செலவையும் நீங்க பாத்துக்குரிங்க என்று கண்கலங்குகிறார்.

மேலும் அனைவரையும் கையெடுத்து கும்புடுகிறார். இந்த குடும்பம் தனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கண்கலங்குகிறார். கதிர் முல்லையை உள்ளே அழைத்து செல்ல முல்லை மேலும் அழுகிறார். என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் கபூருக்கு கொரோனா – சோகத்தில் ரசிகர்கள்!!

அம்மாவுக்கு ஏதும் பெரிய ஆபத்தா என்று கேட்கிறார். கதிர் கொஞ்சம் கொஞ்சமாக முல்லையை சமாதானம் செய்கிறார். கதிர் இருக்கும் நம்பிக்கையில் முல்லை கொஞ்சம் நிம்மதியாக உள்ளார்.

இத்தனை நாட்கள் கதிர் முல்லைக்கு ரொமான்ஸ் சீன் இல்லை என்று பலரும் கேட்டுக்கொண்ட நிலையில் தற்போது கதிர் முல்லையை சமாதானம் செய்ய அவர் தோள் மீது சாய காதல் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெறுகிறது. இந்த பக்கம் ஜீவா மீனாவிற்கு வழக்கம் போல சண்டை தான். ஏன் முல்லைக்கிட்ட விஷயத்தை சொன்ன என்று ஆரம்பிக்க இப்படியே சண்டையில் முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here