நடந்து முடிந்த திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து பழனிசாமியும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது இதுகுறித்து ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக:
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அதில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் திருச்சியில் திமுக கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பல தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமானது தான் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த திட்டம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் தனது கட்சி தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் மற்றும் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்கூட்டியே அறிந்து அதனை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். தற்போது இதற்கு பதிலளிலும் வகையில் அதிமுகவை ஸ்டாலின் மிக கடுமையாக சாடியுள்ளார்.
திமுக மீதான மக்களின் நம்பிக்கை, அடிமை ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது.
குடும்பத்தலைவியருக்கு ரூ.1500, சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள்.
பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?
குடும்பத்தலைவியரே கேட்பர்! pic.twitter.com/OTfM0OO8gE
— M.K.Stalin (@mkstalin) March 9, 2021
சசிகலா ஆதரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இபிஎஸ் – எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!!
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘திமுக மீதான மக்களின் நம்பிக்கை, அடிமை ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது. மேலும் குடும்பத்தலைவியருக்கு ரூ.1500 மற்றும் சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள்.பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை? சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? குடும்பத்தலைவியரே கேட்பர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.