தமிழக சட்டமன்ற தேர்தல் – எடப்பாடியில் போட்டியிடும் முதல்வர்!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதல்வர் பழனிச்சாமி எடப்பாடியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் பிசியாக இருந்து வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை தொடர்ந்து அதிமுக கட்சி சார்பாக தமிழக முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டி இடுவதற்கு விருப்ப மனுவை அளித்திருந்தார். தற்போது அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அதே தொகுதியான எடப்பிடியில் போட்டியிட உள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி!!

இவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் மீண்டும் போட்டி இடுகிறார். இவர்களை போல் ராயபுர தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புர தொகுதியில் அமைச்சர் சிவி. ஷண்முகம், திருவைகுண்ட தொகுதியில் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here