‘அஜித் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா’ – பயில்வான் ரங்கநாதன் பகீரங்க பேட்டி!!

0

நடிகர் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பின் போது, சம்பள பிரச்சனையினால் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என நயன்தாரா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா

36 வயதான நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இதற்கிடையில் எத்தனையோ திறமையான நடிகைகள் வந்த போதிலும் நடிகை நயன்தாராவின் மார்க்கெட் சற்று கூட குறையாமல் காணப்பட்டது. சிவகார்த்திக்கேயன் உட்பட இளம் கதாநாயகர்கள் முதல் ரஜினிகாந்த் போன்ற பெரிய கதாநாயகர்கள் வரை ஜோடி போட்டுள்ளார் இவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும், இவர் மீதான அன்பு ரசிகர்களுக்கு சற்றும் குறைந்ததேயில்லை. நடிகை நயன்தாரா மீதான அன்பை வெளிப்படுத்தும் விதத்தில், இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். ‘நானும் ரௌடி தான்’ என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ – செல்வராகவனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

இப்போது கூட படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா பற்றிய தகவலை, பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் கடந்த 2019ம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பின் போது உருவான சம்பள தகராறில், அப்படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என நயன்தாரா கூறினார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடித்து வரும் தமிழ் படங்களுக்கு 4 முதல் 5 கோடி வரை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here